அறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்

ஜனநாயகச் சட்டத்தில் மனிதர்கள் எல்லோரும் சமம். இஸ்லாமிய சட்டத்தில், வாளும் கற்களும்தான் பதில் - (In a democratic constitution law, everyone are equal. In a Islamic Law, sword and stones are the answer.)

என்று ஒரு நண்பர் வாட்சப் உரையாடல் ஒன்றில் சொன்னார். அவருக்காக ஒரு நீண்ட பதில் எழுத வேண்டியதாயிற்று. இதை எழுத உதவிய பலரின் எழுத்துக்களுக்கும் என் நன்றி. இதோ என் பதில்:


இஸ்லாம் பற்றிய எந்தத் தெளிவும் இந்த வரிகளில் தெரியவில்லை. அதைத் தெரியப்படுத்த வேண்டிய கடமையை எனக்குத் தந்திருக்கிறீர்கள். நன்றி. 

1
ஒரு நாட்டின் மந்திரியும் செருப்பு தைக்கும் கூலியும் தோளோடு தோள் நின்று தொழுவார்கள். இது ஜனநாயகமா?


ஆண்டான் அடிமை மேலோன் கீழோன் என்று எவன் வேண்டுமோ எப்போது வேண்டுமோ பள்ளிவாசலுக்குள் நுழையலாம். இது ஜனநாயகமா?


இந்தியாவில் அகிம்சை என்றாலே என்போன்றோருக்கெல்லாம் முதலில் நினைவிற்கு வருவது மகாத்மா காந்தியைத்தான். அந்த அகிம்சாமூர்த்தி இஸ்லாமிய ஆட்சியின் இரண்டாவது பிரதிநிதியாய் வந்த உமர் பின் கத்தாப் அவர்கள் பற்றி என்ன சொன்னார் என்பது தெரிந்துகொள்ள வேண்டிய ஓர் உண்மை. ”உமர் அவர்களைப் போன்ற நேர்மையானதும் நேரானதுமானதுமான ஓர் ஆட்சியாளர் இந்தியாவை ஆட்சிசெய்தால் மட்டுமே இந்தியாவை மேம்படுத்த முடியும்”. அகிம்சையை உயிராய் நேசித்த காந்தி வாளும் கற்களும் கொண்டு ஆட்சி செய்தவரையா புகழ்வார்?


மகாத்மா காந்தி அவர்களின் பத்திரிகையான ‘யங் இந்தியாவில் ‘1924 ல். அவர் வெளியிட்ட அறிக்கை: “ முகமது நபியவர்களின் வாழ்வின் அதி சிறப்பான பக்கங்களை அறிய ஆர்வங்கொண்டு அவரின் சுயசரிதை படித்தேன். சுவாரசியமாக இருந்தது. அறிய அறிய உண்மை விரிவாய்த் தெரிய வந்தது. இஸ்லாத்தின் வெற்றிக்குப் பின் வாள் இருக்கவேயில்லை அதன் வடிவான வாழ்வியல் மட்டுமே இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்” அவரது வெற்றிக்கான காரணிகள்: · உறுதியான உச்சமான எளிமை · உண்மையான தன்னலமற்ற தனிப்பட்ட தன்மை · அறவே அகம்பாவமில்லாத இனிய இயல்பு · உறுதிமொழிகளை நிறைவேற்றுவதிலும் கடைப்பிடிப்பதிலும் இருந்த மகத்தான பண்பு · தோழர்களிடமும் பின்பற்றுபவர்களிடமும் அவருக்கு இருத்த ஈடுபாடும் ஆழமான அன்பும். · எடுத்த வேலையைச் செம்மையாகச் செய்ய ஆபத்துக்களை அதன் அடிவரைக்கும் சென்று சந்தித்த அவரின் மன வலிமை · அவரது ஆண்மையும் ஆளுமையும் வீழ்ச்சி பெறாத வீரமும் · இறைவனிலும் அவர் எடுத்துக்கொண்ட பணியிலும் அவருக்கிருந்த ஆட்டிப்பார்க்கவே முடியாத ஆழமூன்றிய நம்பிக்கை. இது போன்ற இத்தகைய தன்மைகளையெல்லாம் தன்னகத்தே இயல்பாகவே கொண்டிருந்ததால்தான் அத்தனை கடினமான பாதைகளைக் கடந்து வெற்றியைத் தொட்டிருக்கிறார் நபி பெருமான் அவர்கள். ஆகவே வாள்களுக்கும் நபியவர்களின் வாழ்க்கைக்கும் சம்மந்தம் இருக்கவேயில்லை என்றார் காந்தி 

5
ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும். – காந்திஜி

6
முகம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். – ஜவஹர்லால் நேரு

7
அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முகம்மது நபி ஒருவரே. – கிப்பன்

8
செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம். – கலைஞர் கருணாநிதி

9
எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது. அந்த மனிதர், ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூறினார். எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரே விளக்கினார். – கவியரசி சரோஜினி நாயுடு

10
ஒற்றுமையற்று, ஒழுக்கம் குலைந்து, இறைத்தன்மை உணராமல், தறிகெட்டு வாழும் அரபுக்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உயர்த்த இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராகவே அவர் தம்மை உணர்ந்தார். துளி அகங்காரம் கிடையாது. பெருமையோ வானவர் வந்து “இறைத்தூதர்” என்று அறிவித்துப்போன பெருமிதமோ, கர்வமோ கிடையாது. ஊழியன். வெறும் ஊழியன். இப்படித்தான் முகம்மது தம்மை இறுதிவரை கருதினார். - எழுத்தாளர் பா. ராகவன்

11
குர்-ஆனும், அண்ணல் நபியின் அருள்வாக்கு என்று பரம்பரையாகச் சொல்லப்படுகின்ற ஹதீஸின் பல பாகங்களும் நேராகவோ மறைமுகமாகவோ சொல்லிக்காட்டாத விஞ்ஞானமோ கலையின் துறையோ இல்லை. (ஞானதீபம் பாகம்-8) -விவேகானந்தர்

12
இஸ்லாம் பொய்யான மதமல்ல. எவ்வாறு நான் அதை அறிந்திருக்கிறேனோ அவ்வாறே எல்லா முஸ்லிமல்லாதவரும் படித்துணர வேண்டும். அப்போதுதான் என்னைப்போல் எல்லாரும் இஸ்லாமின்பால் அன்புகொள்வார்கள். -மகாத்மா காந்தி

13
வேதாகம, இதிகாச, புராணங்களின் காலங்கள் மலையேறிவிட்டன. ஆனால், திருக்குர்ஆன் இப்பொழுது உலகிற்கு வழிகாட்டியாயிருக்கிறது. உலக சீரமைப்புக்குப் பாடுபட்ட அண்ணல் நபிகள் பால் நான் கொண்டிருக்கும் மட்டற்ற மரியாதையின் காரணமாக, இரு முறை அரேபியா சென்றுவரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. -குருநானக் (சீக்கிய மத நிறுவுனர்)

14
பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி, மனிதனை மனிதனாக வாழச்செய்து, சமுதாயக் கூட்டுறவு அடிப்படையின் மீது மக்களை வாழ்விக்க ஒரு நிரந்தர நெறிமுறையை வகுத்துத் தந்த வீரர் முகம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் இல்லை. -ரவீந்திரநாத் தாகூர்

15
அராபியப் பாலைப் பிரதேசத்தில் முகம்மது நபி பெருமானார் அவதரித்தது அரேபிய நாட்டிற்கும், இதர எல்லா நாடுகளுக்கும் அனுகூலமாகவே நிலவியது. இப்பெரியாரது வாழ்க்கையில் உலகுக்குப் பொதுவாகக் கிடைத்த நன்மைக்காக அரேபியா மட்டுமல்ல, அகில உலகமே நன்றிசெலுத்தக் கடமைப்பட்டுள்ளது. -அறிஞர் அண்ணா

16
இஸ்லாம் எல்லாக் காலத்திற்கும் எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்துள்ளது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு புதுப் பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துகளிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான். எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காண முடியும். -காஞ்சிபுரம் மீலாது விழாவில் அறிஞர் அண்ணா

17
இஸ்லாம் மார்க்கத்தின் ஏகத்துவக்கொள்கையையும் அதனைப் பின்பற்றி ஒழுகுவதால் மனித சமுதாயத்திற்கு ஏற்படும் அளப்பரிய தன்மைகளைப் பற்றியும் முகம்மது நபி பெருமானார் அவர்கள் தெளிவாகக் கூறிச் சென்றுள்ளார்கள். பெருமானாரைப் பின்பற்றுவதிலே பெருமையுண்டு. உண்மையுண்டு. எண்ணிறந்த நன்மைகள் உண்டு. கடவுள்கொள்கையில் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தினார். சமுதாயக்கொள்கையில் சமத்துவத்தை நிலைநிறுத்தினார். சமயக்கொள்கையில் தெளிவையும் எளிமையையும் நிலைநிறுத்தினார். இது எப்படி அவரால் முடிந்தது என்றால், அல்லாஹ்வின் பேரருளால் அவருக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டது. -மதுரை ஆதினகர்த்தர்

18
மாவீரர்களில் ஒருவராக நான் முகம்மதுவைக் காண்கிறேன். உலக மக்களின் பல பகுதியினரை உயர்நிலைக்குக் கொண்டு வரும் ஓர் உன்னத சக்தி அவருக்கு இருந்தது. இந்திய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் அவருடைய போதனைகள் பெரிதும் உதவியுள்ளன. -ப.க. வாஸ்வாணி (சிந்து ஞானி)

19
நான் அந்த அற்புத மனிதரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன். அவர் மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றப் பிறந்தவர் என்பது என் கருத்து. வரலாற்றில் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த ஓர் அதிர்ஷ்டத்தின் காரணமாக நபிகள் நாயகம் மூன்று விதமான நிறுவனராய் விளங்குகின்றார்கள். அன்னார் ஒரு சமுதாயத்தின் நிறுவனர். ஒரு பேரரசின் நிறுவனர். ஒரு மதத்தின் நிறுவனர். -ஜார்ஜ் பெர்னாட்ஷா

20
முஹம்மத் நபி பெருமானார் தமது சொந்த வாழ்க்கையில் சமூகத்தன்மையும், விசுவாசமும், குடும்பத்தின் மீது பரிவும், மன்னிக்கும் தன்மையும் உடையவராய் இருந்தார். அவர் தமது அதிகாரத்தின் உச்ச நிலையிலே இருந்தபோது மிகவும் எளிதான வாழ்க்கையே நடத்தினார். -சேம்பர்ஸ் என்ஸைக்ளோபீடியா

21
அரேபிய நபியின் சரிதையை – அவர்களது குணாதிசியங்களை- அவர்களது வாழ்க்கையை நாற்பது வருடமாக ஆராய்ந்துவருகிறேன். உலகம் இன்றுவரை கண்டிருக்கும் தலைவர்களில் இவர்கள் நிகரற்றவர் என்றே கூறவேண்டும். -ஜெனரல் பர்லாங்

22
நபிகள் நாயகம் பெருமானார் அவர்கள் தம்மினும் தாழ்ந்தவர்களிடம் மிக்க அன்பாகவும், அனுதாபமாகவும் நடந்துகொண்டார். குழந்தைகளிடம் அதிகம் அனுதாபமுள்ளவராய் இருப்பார். இவர் தமது வாழ்நாளில் ஒருவரையும் அடித்தது கிடையாது. ஒரு சமயம் ஒருவருக்கு சாபமிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டபோது “நான் சாபமிடுவதற்காக அனுப்பப்படவில்லை. மானிடர்களுக்கு அருளாகவே அனுப்பப்பட்டேன்” என்று கூறினார். - தாமஸ்கார்லைல் (வரலாற்றாசிரியர்)

23
பெருமானார் பூவுலகில் மக்களுக்குப் போதனைகள் புரிந்தவை அனைத்தும் உண்மைகள் பொதிந்தவை. கருத்தாழமிக்கவை. - ஜுல்ஸ் மாஸர்மான் (அமெரிக்கா- யூத மனோதத்துவ விஞ்ஞானி)

24
துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள் ‘முகம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே அப்படியின்றி அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள். – எஸ். எச். லீடர் 

25
இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்? - வாஷிங்டன் இர்விங்

26
நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது. – டாக்டர் ஜான்சன்

27
முகம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். – பெர்னாட்ஷா

28
திருக்குர்ஆனுக்கும் தூதர் முகம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை. – நெப்போலியன்

29
இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது. – ஜி.ஜி. கெல்லட்

30
சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது. – வில்லியம்மூர்

31
நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும். – தாமஸ் கார்லைல்

32
நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல. – டால்ஸ்டாய்

33
முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். - பெர்னாட்ஷா

34
நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது. - டாக்டர் ஜான்சன்

35
இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் “ஏன் அப்படி?” என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.


எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது. – மைக்கேல் ஹெச். ஹார்ட் – ‘The 100′ என்ற நூலில்..

ஆதாரம்: http://www.sltj.lk/arinyargal-paarwaiyil-nabigal-naayagam/

1 comment:

mohamedali jinnah said...

தொடரட்டும் உங்கள் சேவை /வாழ்த்துக்கள்