பெண்

இயல்பில்
பெண் தனக்கு விருப்பமானவனுக்குத்தான்
பிள்ளை பெற்றுக்கொள்வாள்
மற்ற ஆண்களெல்லாம் வன்முறையைக்கொண்டே
பெண்களை அடையமுடியும்
இயல்பில்
ஆண் தனக்குப் பிடித்தமான பல பெண்களுடன்
உல்லாசமாக இருப்பான்
தனக்குப் பிடித்தபெண் மறுத்தால்
வன்முறையில் அடையமுயல்வான்
இந்த சிக்கல்களுக்கான தீர்வுதான்
திருமணம்
திருமணம் என்பது
ஆண் பெண் உறவுகளுக்கான
பொது அறம்
திருமணத்தையே சிக்கலாகப் பார்ப்பதுதான்
இன்றைய காலகட்டம்
ஏனெனில்
பெண்ணின் உண்மையான இயல்பும்
ஆணின் உண்மையான இயல்பும்
அங்கே கட்டுப்படுத்தப்படுகின்றன
எல்லைமீறிய சுதந்திரத்தையே நேசிக்கும்
இன்றைய அறிவு வளர்ந்த ஆசை மனங்கள்
எந்தக் கட்டுக்குள்ளும் கிடக்க
விரும்பவே இல்லை
ஆயினும்
திருமணம் என்கிற
பொது அறம் இல்லாவிட்டால்
மீண்டும் உலகம்
காட்டுமிராண்டித்தனமாகவே
ஆகிப்போகும்
வன்முறையையோ
பெண்ணுக்காகவே உருவாகும்
போர்களையோ
யாராலும்
தடுக்கவோ தவிர்க்கவோ
முடியாது
இவை
எல்லாவற்றையும்விட
பிள்ளைகள்
தாயுமற்ற தந்தையுமற்ற
அனாதைகளாக
மனோவியாதியுடன் கூடிய
வன்முறையுடன் மட்டுமே
வளர்வார்கள்

No comments: