நாணமே நீயிடும் அரிதாரம்

நீ
வைகறைப் பனிவிழும்
புல்மடியோ - மலை
வாழையில் வெடித்த பொற்
கனிநிலவோ

அந்தி
வானத்துச் சந்தன
ஒவியமோ - நதி
கடலுக்குச் சூட்டிடும்
நுரைச்சரமோ

முழு
நிலவு உன் கூந்தலில்
முகங்கழுவும் - வன
வண்டுகள் கண்களைக்
காதலிக்கும்

வான்
வசந்தம் உன் இளமையில்
அசைந்தாடும் - தேன்
அருவியுன் இடைவிழ
மனுப்போடும்

உயிர்
எழுத்துக்கு உன் பெயர்
உயிராகும் - உன்
நாணமே நீயிடும்
அரிதாரம்

நீ
நடப்பது நிலத்துக்குத்
தெரியாது - உன்
நினைவின்றி கனவே
விளையாது

மெல்ல
முகர்ந்தால் துவள்வது
அனிச்சமலர் - கண்
பார்வையில் துவளும் நீ
என்ன மலர்

உன்
நகத்தையே உறிஞ்சும்
செந்தேனீ - பொன்
விரலுக்கு வேண்டாம்
மருதாணி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: