காதல் சிறகு

சின்னஞ்சிறு கன்னி வாழை
தங்கப் பேழை
புதுத் தாழை
எந்தன் அந்தப்புரம்
வரும் நாளை

அந்தத்
தேனூறிடுந் திருநாளினுள்
தினந்தோறுமென் மனந்தாவிட

ஏங்கும் கண்ணில் தினம் சோகம்
உருவாகும்
அதிவேகம்
இன்னும் எத்துணைக் காலம்
இத்தாகம்

செல்லக்
கிளியேயுன் இடைதாவிடத்
தடையானயென் நிலைகூறிட

வருவேன் என் சிறகினை விரித்து
தேதி குறித்து
பூக்கள் பறித்து
உந்தன் கண்களின்
அருவியை நிறுத்து

No comments: