7 வௌவால்கள்

புதியவனே

காலங் காலமாய்
யுகம் யுகமாய்
பாழடைந்த மண்டபங்களின்
அழுக்கடைந்த சட்டங்களில்
தொங்கிக் கொண்டிருக்கும்
வௌவால்கள்
எப்போதும்
ஏளனமாய்ச் சிரிக்கும்

நீ
தலை கீழாய்
நடக்கின்றாய் என்று

No comments: