21 இந்த மனசு

தேடித் தேடி
தினமும் வாடும்

வாடி வாடி
உயிரைச் சுடும்

விட்டுவிடு என்று
கட்டளை இட்டால்

முன்னைவிடத் தீவிரமாய்
தொட்டுக்கொண்டு
அழும்

தொடலாம் வா
என்றழைத்தாலோ

தூரமாய்ப் போய்
துவண்டு கிடக்கும்

அவ்வப்போது
உறக்கத்தைத்
திருடிக்கொண்டு
கெக்கரித்துச் சிரிக்கும்

ஆசைகளைச்
சேகரித்துக் கொண்டு
கனவுகளாய் முளைக்கும்

அவிழ்த்துவிட்டால்
விளையாடும்

அடைத்துப் போட்டால்
உடைத்துக் கொண்டு
வெளியேறும்

இந்த மனசு

No comments: