தமிழ் மாதக் காதல்


தைத்தான்
அவளைக் கண்களால்

மாசில்லாக் காதல்
உனதென்றால்...

பங்குநீ சரிபாதி இனியென்
வாழ்வில் என்றாள்

சித்திரை விலக்கி
வெளியில்வா பொன்மலரே

வைகாசி என்று வாட்டும்
வரதட்சணை வேண்டாமெனக்கு
என்றான்

ஆ..நீ..தானடா
ஆண்மகனென்று

ஆடிப் பாடி
தாவணிச் சிறகடித்து
அவன் மடிவிழுந்தாள்
அவள்

புரட்டாசியில் ஊருக்கே சொல்லி
ஐப்பசிக்கும் விருந்தாக
கார்த்திகைக் கணையாழியும்
மார்கழித் தேன்நிலவுமாய்
அமர்களப்பட்டது
தமிழ்க்காதல் திருமணம்

No comments: