அறியார் அறியார்


ஊரார் அறியார்
உறவார் அறியார்
நண்பர் அறியார்
நலங்காப்பார் அறியார்
பெற்றோர் அறியார்
பிறந்தோர் அறியார்
பிரிந்தே மறைந்த
உயிருறவும் உம்போல்
உணர்ந்துணர்ந்து
அறியார் அறியாரே

நெருப்பூட்டும் ஈர
நினைவுகளோடும்
நொறுங்கிக் கதறும்
வெறுமை மனத்தோடும்
இழந்தோரே இழப்பை
அறிவதைப்போல்
மேதினியில் வேறெவரும்
வேறெங்கும்
அறியார் அறியார்
அறியாரே உயிரே

No comments: