இரு ரோசாக்கள் கொடுத்து
எந்த ரோசாவைச்
சூடிக்கொள்ளப்போகிறாய்
என்றேன்

இருண்டுவிட்டது அவள்
முகவானம்

இரு சேலைகள் கொடுத்து
எந்தச் சேலையை
உடுத்தப்போகிறாய்
என்றேன்

மூன்றாவது உலகயுத்தம்
துவங்கியது அவள்
முன் நெற்றி வாசலில்

அவள் நட்பாயிருக்கும்
நண்பனையும் காட்டி
யாரோடு உன் வாழ்க்கை
என்றேன்

பிரபஞ்சம் அழிந்து
புல் பூண்டும் மிஞ்சாமல்
போனது

No comments: