அஃதொன்றும்
வெகு தூரத்திலுள்ள
பகற் கனவில்லை
பக்கத்திலேயே இருக்கும்
தேதி தெரியாச்
சொற்பப் பொழுதுதான்
ஞாபகமூட்டுவதற்காக
இந்த நொடி விசும்பலை
உன் அழுக்கு முந்தானையில்
முடிந்துவைத்துக்கொள்
அழைத்துவிடாதே
என்னை நீ முந்திக்கொண்டு
தெரியப்படுத்த
நாதியற்றவனிடமிருந்து
வாரா தூரமிருந்துவிடாதே
மூடிய விழிகளாலும்
தேடுவதென்
உறவு

No comments: