01 வல்லரசாவதல்ல நல்லரசாவதே சுதந்திரம்


பொண்டாட்டி கை
நெய்யப்போல
அள்ளிக்கிறதில்லையாமே
சுதந்திரம்னா
அம்மாவோட பாசம்போல
பகிர்ந்துக்கறதாமே

சொந்த சுகத்தைவிட
அடுத்தவன் நகத்தையும்
கெடுக்காம வாழறதாமே

சாக்கடைக்கு
மூக்கைப் பொத்தறதைவிட
நாத்தத் தேக்கமே வராம
பாத்துக்கறதாமே

நூறு ரூவா லஞ்சம் கொடுத்து
குறுக்கால சாதிக்கும்போது
செல்லாத ஒத்தைச் காசா
நம்ம நாட்டை
நாமே
ஆக்கிடறோம்னு தெரியாதா

சாதிக்குத்
தலைவனிருக்கான்
மதத்துக்குத்
தலைவனிருக்கான்
கட்சிக்குத்
தலைவனிருக்கான்
இந்தியாவுக்குன்னு
யாரு இருக்கா

வல்லரசாவதல்ல
இந்தியா
நல்லரசாவதே
சுதந்திரம்

No comments: