அழகிய காதல் மலரே


அழகிய காதல் மலரே
என் ஆருயிர்க் காதல் கிளியே

பழகிய நாளாய் நிலவே
புதுப் பாலாற்றில் நீந்துது மனமே

குழைவது உன்னெழில் முகமே
என் காதலின் மொத்தமும் நீயே

அலைகளில் தவிக்கும் நுரையாய்
என் அணுக்களில் உனக்கென ஏக்கம்

மழையென விழுந்தாய் என்னுள்
என் மனதினை இழந்தேன் நானும்

விழைவது என்றுமுன் மனமே
அதில் உறங்காத நானோர் பிணமே

வளைக்கரம் குலுங்கிட வந்தாய்
என் வாழ்க்கையின் ஒற்றைப் பூவாய்

விலையேது உனக்கிவ் வுலகில்
என் உயிர்தந்து உன்மடி வீழ்வேன்

No comments: