பெண்ணியப் போலி


கொஞ்சமே கொஞ்சம்
அதுவும்
சிலுசிலு கண்ணாடி
ஆடையணிந்து

போதாதென்று
தொப்பலாய் நனைந்து

சிதைந்த செல்களிலும்கூட
செக்கச் செவேரென்ற
நெருப்பு மூட்டி

கால்வாசி ஆடைகூட
சாதிக்காது இனி என்ற
காலம் உணர்ந்து
மேலும் மேலும்
வெட்டியெறிகிறாள்
நனைகிறாள்
காணும் தேகங்களை
'தந்தூரி' செய்கிறாள்
கோலி-பாலி-ஹாலிவுட்காரி

நெஞ்சு நிமிர்த்தி
பெண்ணியம் பேசும்
முற்போக்கு அரங்கில்
அனைத்தையும் கழற்றியெறிந்த
அந்தரங்கச் சொல்லாடலும்
படுக்கை நெடி வெடிக்கும்
கசங்கல் நடையுமாய்
எழுதிக் கவிழ்கிறாள்
பெண்ணியப் போலி

No comments: