ஒரு கிராமத்துக் காதல்


வெறிச்ச விழி மூடாம
வருத்தத்துடன் நானிருந்தேன்
பருத்திக் கொட்டை கண்ணழகே
பறிச்சிக்கிட்டே என்னுசுரை

வறுத்து வெச்ச முந்திரியே
வழுக்கிக்கிட்டே போகுறியே
தெறிச்சு விழும் முத்தழகே
தவிச்சிருக்கேன் பாரேன்டி

குறிச்சி வச்சத் தேதியில
கொறிச்சிப் பாக்க வேணுமடி
நரச்சமுடி ஆகும்முன்னே
நரம்பதிர வாயேன்டீ

No comments: