62

ஆணும் பெண்ணும்
கலந்த முழுமையே கடவுள்

பிளந்த பகுதிகள்
ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பதால்
இணையும்போதுதான்
தன்னைக் காணும் என்பதால்
ஆணாய் பெண்ணாய்
பிரிந்த பிறப்புகள் மண்ணில்

துளி வேற்றுமையும் இன்றி
முழுமொத்த ஈர்ப்புடன்
இரு பாதிகள் இணையும் போதுதான்
மீள்கிறது தெய்வம்

ஈர்ப்பில்லாமல் எவரும் இணையாதீர்
வெட்டிச் சேர்க்கைகள்
இயற்கை அவமதிப்பாகும்

சரியான பாதியும்
சரியான மீதியும் சேரும்வரை
உறவில் முழுமை இல்லை

அந்த இறைமை கிட்டும்வரை
உயிருக்கு உயிரில்லை
பாதிகள் அலையும் பரிதவித்தே எப்போதும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

1 comment:

பிரசாத் said...

மிகவும் நல்ல கருத்து நண்பரே...