பொற்குணவாளருக்கு வாழ்த்து


பொற்குணவாளரே பொற்குணவாளரே
போதுமும் புன்னகையையே - உம்முன்
நிற்கிற போதுந் தீபடும் மெழுகாய்
நேரமுங் கரைகிறதே - இனியும்
அற்புதச் சொற்களை அள்ளிப் பொழிந்தே
ஆளை விழுங்காதீர் - நல்லக்
கற்பனை குழைத்துக் கைவசச் சரக்கைக்
கதைத்து மயக்காதீர்

நெற்பயிர் சரியும் சூரியன் சரியும்
நீங்களோ சரிவதில்லை - உங்கள்
சொற்களில் செயலில் உலகமே நிற்பினும்
சுத்தமோ குறைவதில்லை - இந்தக்
கற்பிலா உலகில் எப்படி நீங்களும்
காலங்கழிக்கிறீரோ - உம்முன்
நிற்கிற போதுந் தீபடும் மெழுகாய்
நேரமுங் கரைகிறதே!

No comments: