மாசறு மௌனமாய்
உள்ளுக்குள் மறைந்து கொண்டு
உதட்டு ஒலிபெருக்கியில்
பிரசங்கமே செய்யச் சொல்கிறாய்
நீயற்ற எவரையோ நிறுத்தி

உன் பவளப் பல்லிடுக்கு வழியாக
கவனங்களை ஏமாற்றிவிட்டு
எனக்குச் சொந்தமான உன் உயிர்
உடைந்து கரையவே செய்கிறது என்பதை
நானறிவேன் என்பதையும் நீ அறிவாய்

உன் மூச்சுக்காற்றால்
அக்கறையாய் ஊதி ஊதி
தூசுகளை எல்லாம் தூரக் களைந்து
பரிசுத்துமாக்கி வைக்கப்பட்ட
தெளிந்த பார்வை கொண்டவை
என் கண்கள்

இப்போது அவற்றை
எப்படிக் குத்திக்கிழித்துக்கொள்வது
என் உனக்காக நான்

No comments: