சின்ன இதழ் விரித்தாள்


சின்ன இதழ் விரித்தாள்
சிரித்தாள் செவ்வந்திப்
பூவானாள்

தினமும்
வண்ண விழி அசைத்தாள்
மொழிந்தாள் வளமிக்கக்
கவியானாள்

மனதில்
பின்னல் ஆட நடந்தாள்
மயிலாள் பேரின்பச்
சுவையானாள்

பருவக்
கன்ன வனம் சிவந்தாள்
வளைந்தாள் கற்கண்டு
நிலமானாள்

எழிலாள்
தந்த உடல் நெளிந்தாள்
மிளிர்ந்தாள் தரைவந்த
நிலவானாள்

விழிக்குள்
வந்து வந்து நுழைந்தாள்
விரிந்தாள் வாவென்று
எனையழைத்தாள்

நினைவால்
வெந்து வெந்து மடிந்தேன்
மலைத்தேன் நினைவுக்கு
விருந்தானேன்

எனக்குள்
சிந்தை சிதையக் கண்டேன்
சிலிர்த்தேன் இவளன்றி
உயிர்வாழேன்

No comments: