சில வருடங்களுக்கு முன் விபத்திலிருந்து உயிர்தப்பி வந்த நண்பருக்கு எழுதிய மடல்

மயிரிழையில் உயிர்தப்பியவருக்கு

எல்லோரும்
எல்லாவற்றையும்
சந்தித்துவிடுவதில்லை

நீங்கள் சந்தித்ததை
எவரும் நாள் குறித்துச்
சந்திக்கப் போவதும் இல்லை

சந்தித்த எல்லாவற்றையும்
வந்து சொல்வதற்கு
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை

வாய்த்த உங்களுக்கு
வாழ்த்துச் சொல்ல
வார்த்தைகளில்லை

வாழ்க்கையில்
எல்லாமே விபத்துதான்
இந்தக் கவிதையெழுத
நேர்ந்ததும்

No comments: