கண்களின் திறவுகோல்


உன்
உபதேச தேசத்தில்
கர்ணனும்
நீயே
கையேந்துபவனும்
நீயே

இருந்து
கொடுத்தாய்

இருந்தே
தவிக்கிறாய்

உன்
கண்களின் திறவுகோல்
உன்னிடமே இருந்தும்
பிறர்தாம்
திறக்கவேண்டும்

இது
உனக்கு
மட்டுமல்ல
எல்லோருக்குமே
தலையெழுத்து

No comments: