கண்ணீர்


சில நேரங்களில்
சில ராட்சச சோகக் கணைகள்
நம் நெஞ்ச அமைதியை
மிகக் கொடூரமாய்த் தகர்க்கும்

அவை
அநீதி மேலெழும்பும்
மரணக் கணங்கள்

அது பொழுதில்
ஒரே ஓர் அழுகை
நெருப்பில் வீசிய
உப்புக் கல்லைப் போல
மிகச் சப்தமாய் வெடிக்க

நம் விழிகள்
ஒரு சுடு மழையைச்
சுத்தமாய்ப் பொழியுமானால்
ஆறுதல் என்னும் அருமருந்து
பிறர் தயவின்றியே
அதனினும் பூரணமாய்
நம் நெஞ்ச நிலங்களை
அருவி நீரென நனைக்கும்.

No comments: