*ஓரினச்சேர்க்கையும் ஒரு பதினாறு அதிரடிக் குறிப்புகளும்*

1. ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதன் வாயிலாக மனித இனத்திலிருந்து இன்னொரு இனம் பிரிக்கப் படுகிறது. சாதிகள் மூன்றொழிய என்று அவ்வையைத் திருத்தி எழுதவேண்டும் ;-) அந்த மூன்றாம் சாதிக்குள்ளும் ஏழு சாதி இருக்கிறதாம் அது வேறு கதை.

2. தன் மகன் ஓரினச்சேர்க்கையாளன் என்பதை எந்த பெற்றோரும் ஏற்பதில்லை. எந்த உறவுகளும் அங்கீகரிப்பதில்லை. அதனாலென்ன? உறவு என்று சொல்லிக்கொள்ள பிள்ளைகளே பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு உறவுகள் என்பது ஒரு பொருட்டா  என்ன?  ;-)

3. உலகில் இனப்பெருக்கமே இல்லாத ஓர் இனம் ஓரினச்சேர்க்கையர் இனம்தான். பறவைகள் விலங்குகள் புழு பூச்சிகள்கூட இவர்களைவிட மேல்தான் ;-)

4. விலங்குகளிலும் ஓரினச்சேர்க்கை இருக்கிறது அதனால், மனிதர்களுக்கும் அது ஏற்புடையது இயற்கையானது என்று சொல்கிறார்கள். அப்படிச் சொன்னால் விலங்குகளில் உடலுறவுக்குப் பின் ஆணை பிரியாணியாய்த் தின்று தீர்த்துவிடும் விலங்குகள் உண்டு. இவர்கள் எப்படி? ;-)

5. நாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று வெளியில் சொல்ல ஒரு தைரியம் வேண்டும். அது அசிக்கமாகத் தெரியாத அவர்கள் நிச்சயம் வேறினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி. எனவே அவர்களுக்கு அந்த அங்கீகாரம் வழங்குவது சரிதான் ;-)

6. இந்த சட்டத்தால் பெற்றோர்களின் பீதி பன்மடங்காய் வளர்ந்துவிடும். முன்பு தன் மகன் எவளை இழுத்துக்கொண்டு வந்துவிடுவானோ என்று கவலைப்பட்ட பெற்றோர், இப்போது எவளையாவது தாராளமாக இழுத்துக்கொண்டுவா, எவனையாவது இழுத்துக்கொண்டு வந்துவிடாதே என்று கெஞ்சுவார்கள் ;-)

7. பெண்களுடன் பழகும் ஆண் பிள்ளைகளை இனி பெற்றோருக்கு ரொம்பப் பிடிக்கும். நண்பன் என்று ஒரு பையனை வீட்டுக்கு அழைத்துவந்தால், பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்வார்கள் ;-)

8. ஆண்டவன் படைப்பில் தவறு என்று ஓரினச்சேர்க்கையாளர்களைப் பற்றி இனி யாரும் கூறமாட்டார்கள். ஆண்டவன் சரியாகத்தான் படைத்திருக்கிறான். நாம்தான் பாகுபாடுபடுத்தத் தெரியாமல் இருந்துவிட்டோம் என்று நம் தவறை உணரலாம் ;-)

9. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு தனியே ஐ.டி கார்டு வழங்கப்பட்டுவிட்டால், நம் வீட்டுப் பெண்பிள்ளைகளை அவர்களோடு எங்குவேண்டுமானாலும் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் அனுப்பிவைக்கலாம். அதைவிட பாதுகாப்பு வேறு எதுவும் இருக்க முடியாது ;-)

10. ஓரினச்சேர்க்கையாளர்களிடம் ஒரு வசதி. வரம் வாங்கி வந்தவர்கள். ஆண் பெண் உறவு என்றால். ஒரு பூட்டு ஒரு சாவிதான். அடிக்கடி திறந்தால் அலுத்துப்போகும். ஓரினச்சேர்க்கையாளர்கள் அப்படியல்ல. இரண்டு பூட்டு இரண்டு மாஸ்டர் சாவி. இந்த உறவில் சுவாரசியம் அதிகம் ;-)

11. மனைவியை பிரசவ ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்துவிட்டு கவலையோடு அலைய வேண்டிய அவசியம் இல்லை ;-)

12. மனைவியை ஆடிமாதத்தில் பிரிந்து ஆடிப்போய் நிற்கத் தேவையில்லை ;-)

13. கர்ப்பத்தடை மாத்திரைகள் மருந்துகள் சாதனங்கள் என்று எதுவும் தேவையில்லாத இன்ப வாழ்வு ;-)

14. கல்யாணமாகி இவ்ளோ வருடங்களாகியும் குழந்தை இல்லையா என்று யாரும் அனுதாபப்படமாட்டார்கள் ;-)

15. மலடி என்ற சொல் இந்த இனத்தவருக்கான அகராதியில் அர்த்தமிழந்து நிற்கும் ;-)

16. இந்த புதிய இனத்தின் கவிஞர்கள், ”பின்னழகே பின்னழகே பின்னுகிறாய் பின்னழகே” என்ற ரீதியில் எழுதித் தள்ளுவார்கள் ;-)

அன்புடன் புகாரி
20030810

No comments: