மீண்டும் குரங்காவோம் வா

மனிதக் கண்களுக்கு
கிட்டத்தில் உள்ளவையே
தெரியும்

வாசலில் நிற்பவரைக்
காணக்கூட
இனி
டெலஸ்கோப்தான்

முதுகு வளைந்து
மீண்டும்
மனிதன் குரங்கு

காகித எழுத்துக்களை
வாசிக்கவே முடியாது
கணித்திரை எழுத்துக்களே
கண்களுக்குத் தெரியும்

பேச்சைத்
தொலைத்துவிடுவான்
நாளைய மனிதன்

எல்லாம்
எழுத்துக்கள்தாம்

இப்படியே
தட்டிக்கொண்டே
உக்காந்திருந்தால்
வேறென்னதான் ஆகுமாம் :-)

கணினி
செல்பேசி
தொலைக்காட்சி
தருகின்ற
நவீன வாழ்வில்
மனிதன் மீண்டும்
புராதனக் குரங்கு

No comments: