04

மிருகங்களால் ஆனது
மனது

உள்ளுக்குள்ளேயே
ஒன்றையொன்று கொன்று திண்ணும்
பசி கொண்டவைகளால் ஆனது
மனது

காதல் காம்பில்
கண்ணீர்ப் பால் பொழிய
மிருகங்கள் செத்து
வண்ணத்து பூச்சிகள் பறக்கின்றன

மனித இனத்தையே
தேன் பூக்களாக்கி
வாழ்க்கையை ருசிக்கின்றன

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

1 comment:

சிவா said...

மிகவும் அருமை , உண்மை.. அனுபவபூர்வமாக உணர்ந்ததால் சொல்கிறேன் ஆசான்