கன்னங்களில்
சிவப்புக் கம்பளம் விரித்தாள்
கண்களில் என் கண்களுக்கான
நாற்காலி இட்டாள்
எனைக் கண்டு உயர்ந்த மூச்சில்
உயிரின் வாசனை வீசினாள்
காதலிக்கிறாயா என்றேன்
இல்லை என்கிறாள்
கவிதைக்குப் பொய்யழகு
அவள் ஒரு கவிதை

No comments: