53

ஒரு பழைய மாலை நேரத்தின்
இளமையில்
என் மனவாசல் கதவுகளைத்
திறந்துகொண்டு நீ
அவசரமாய் நுழைந்துவிட்டாய்

தத்தித் தத்தியும் தாவித் தாவியும்
இடைவிடாமல் நீ
உள்ளே நடக்கும்போது

தாள லயத்துக்குக் கட்டுப்பட்ட
அசாத்தியக் கலைஞனாய்
இம்மியும் பிசகாமல்
துடித்துக்கொண்டிருக்கிறது
என் இதயம்

நீ நின்றால்?

இல்லை இனி உன்னால்
நிற்க முடியாது

என் இதயத் துடிப்பு
நிற்கும்போதுதான்
என் மனத்தளத்தில்
புல்லரிக்கப் புல்லரிக்கப்
புதுப் புதுப்
பொற்சுவடுகளைப் பதிக்கும்
உன் பாதங்களும் நிற்கமுடியும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

2 comments:

thiyaa said...

ஆகா அருமையான கவிதை

சிவா said...

//நீ நின்றால்?//

நின்று விடுமா என்ன ??


//
என் இதயத் துடிப்பு
நிற்கும்போதுதான்
என் மனத்தளத்தில்
புல்லரிக்கப் புல்லரிக்கப்
புதுப் புதுப்
பொற்சுவடுகளைப் பதிக்கும்
உன் பாதங்களும் நிற்கமுடியும்//


மிகவும் அருமை ஆசான்