26

மரணம் நேர்ந்ததும்
மண்ணின் தொடர்புகள் எல்லாம்
துண்டிக்கப்பட்டுவிடுகின்றன

மரணத்திற்குப் பின்
நிம்மதிதான்
எஞ்சி இருக்கப் போகிறது என்றாலும்
மண்ணில் உள்ள இனிய வாழ்வை
மரணத்தால் நாம் இழக்கிறோம்

அதை இழக்க
எந்த உயிரும் சம்மதிப்பதில்லை

ஆகவே
சொர்க்கத்தை
மண்ணில் காண்போம்
யாவரும் வாழவும்
நாமும் வாழவும் வாழ்வோம்

மரணம் பற்றிய சரியானதும்
நிம்மதியானதுமான அறிதல்தான்
மனிதனுக்கு அந்த
உயர்வான உணர்வுகளைத் தரும்

1 comment:

Tamilparks said...

அருமை, வாழ்த்துக்கள், தங்கள் படைப்புகளை நமது தமிழ்த்தோட்டத்தில் வெளியிட விரும்பினால் அனுப்பி வைக்கவும் http://tamilparks.50webs.com