3

காதலியின்
மடியில் கிடந்து ஒருவன்
உணர்வு உச்சத்தில் சொல்லும்
வார்த்தை எது

இப்படியே செத்துப் போகலாம்
என்று இருக்கிறது
என்பதுதானே

ஏன்?

அந்த நிமிடம்
பரிபூரண நிம்மதி
மரணத்தில் மட்டும்தான் என்பதை
காதல் உணர்ந்திருக்கிறது
என்பதால்தானே

மரணம் உன்னைக் காதலிக்கிறது

1 comment:

இலந்தை said...

நல்ல கருத்து
இலந்தை