81

நான் உயிருக்குயிராய்க்
காதலிக்கும் உன்னிடம் கேட்டேன்
ஒரு நாள்கூட நீ என்னைக்
காதலித்ததில்லையா
என்று

நீ சொன்னாய்
யோவ், ஒரு நாள்கூட
நான் உன்னைக்
காதலிக்காமல் இருந்ததில்லையா
என்று

காத்திருந்த கண்ணீர்
சட்டென்று இமைக்கரை ஏறி
எரிமலைக் குழம்பாய்ப் புரள்கிறது

சரி போடீ
உன்னிடம் பேசி
ஒரு பிரயோசனனும் இல்லை
என்று அழுகிறேன் நான்

என்னை மன்னிச்சிடுய்யா
என்று கூறி
என் உயிர்த் தோட்டம்
கடந்து
பறந்து
போயே போய்விடுகிறாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: