4

தாளாத துயர் வரும்போது
தன்னையறியாமல்
மனிதன்
மரணத்தைக்
காதலிக்கவே செய்கிறான்

வாழ்நாளில்
ஒரே ஒரு முறையாவது
மரணத்தைக் காதலிக்காத
மனிதன் இருக்கிறானா

உயிர் கிழியும்
கொடுந் துன்பத்தில்
மனிதன் நினைப்பது
இரண்டினை
ஒன்று இறைவன்
அடுத்தது மரணம்

இறைவனும் மணரமுமே
மனிதமனப் படகின்
ஆறுதல் கரைகள்

மரணம் உன்னைக் காதலிக்கிறது

No comments: