76

என் விரல்களை
உன் விரல்களில்
கோத்துப் பார்த்தேன்

யாழிசை மொழி பொழியும்
என் தேவதையே

அந்த அழகை நான்
சொல்லவும் வேண்டுமா

அசந்துதான் போனேன்
உயிர் துடித்து
உடல் நிறுத்திக் கிடக்கும்
சிலையாக

நான் மட்டுமா
என் செல்லமே
நீயும்தான்

அப்படியே ஓர் புகைபடம்
எடுத்து பத்திரப் படுத்திக்கொள்வோமா
என்று நம் ஆசைகள்
நம்மை அவசரப்படுத்தின

ஆனால் என் இதயமோ
வேண்டாமடா வேண்டாம்
வெறும் புகைப்படம் வேண்டாம்
இந்த விரல்களை
உனக்கே உனக்கானதாய் ஆக்கு
என்று கெஞ்சிக் கூத்தாடியது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: