கவிதைகள் நிரம்பிய
நிலவுக்குள்

வீசும்
அலைகளின் மீது

இமைத் துடுப்புகள்
அசைத்து

விழிப்படகுகள்
நீந்த

தனித்த தீவுகளுக்குள்
ஒதுங்கி

சிலிர்ப்புச்
சிறகசைத்து

இளைப்பாறுகின்றன
நெஞ்சக் குஞ்சுகள்

அன்புடன் புகாரி
20121223

No comments: