கைச்சொர்க்கமாக இல்லாவிட்டாலும்

ஒரு
சுவர்க்கடிகாரத்தின்
பெண்டுலத்தைப் போல

அதுவா
இதுவா

இதுவா
அதுவா

என்று
அல்லாடும்போது
நிலம் விழுந்த
திமிங்கிலத்தைப்போலத்தான்
நிம்மதி செத்துக் கொண்டிருக்கும்

0
எதுவென்று
ஒரு
நெருப்புக் கனியைக்
கண்டதுபோல
அறிந்துகொண்டதும்

நெடுந்தூரம்
விடைபெற்றுச் சென்றிருந்த
நிம்மதி
மீண்டு வந்து
கண் பிழிந்த நீரில் மூழ்கியும்
கனலாய்ச் சுட்டுக்கிடந்த நெஞ்சில்
பூரணமாய் நிறைந்தும்விடும்

0
விரும்பியதுதான்
அறியப்பட்டதும் என்றால்
அந்நொடியே
அது சொர்க்கம்தான்
மறுப்பதற்கில்லை

ஆனால்
விரும்பாததாயினும்
அலைபாய்ந்து அலைபாய்ந்து
அறற்றிக் கிடந்த
அல்லாடல்களிலிருந்து
விடுதலை பெற்று
அறியப்பட்ட நிறைவு
நிச்சயம்

கைச்சொர்க்கம் இல்லாவிட்டாலும்
மிக விரைவில்
காணப் போகும் சொர்க்கம்தான்

1 comment:

mohamedali jinnah said...

சொர்க்கம்தான்