யாப்புக்குத் தோப்புக்கரணம்

யாப்புக்குத்
தோப்புக்கரணம் போடமாட்டேன்
என்றார்
அதிலுள்ள
எதுகையை ரசித்தேன்

மரபுக்குள்
மடிவதோ என்றார்
அதிலுள்ள
மோனையை ரசித்தேன்

எதுகை மோனை தொல்லை
எனக்கதில் நாட்டம் இல்லை
என்றார்
அதிலுள்ள
இயைபை ரசித்தேன்

இப்படி எழுதிப்போகும்
இந்தப்
புதுக் கவிதையைக்
கண்டேன்
அதன் இயல்பினையும்
ரசித்தேன்

2 comments:

சசிகலா said...

ரசிக்க வைத்த வரிகள் சிந்திக்கவும் வைத்தது சிறப்பு.

Anonymous said...

பிடிச்சிருக்கு....
Vetha.Elangathilakam.