ஒரு கவிதை எழுதப்பார்க்கிறேன்

கொஞ்சுமுகப் பிஞ்சுமகன்
பாலச்சந்திரனின்
நெஞ்சைத் துளைத்தேறிய
இனவெறி ராணுவ ரத்த ரவைகளின்
காட்டேறி வக்கிர உச்சங்களை
உணர்வு தப்பாமல் சொல்லிவிட

ஆனால்
என் தமிழின்
எந்த ஒரு வார்த்தைக்கும்
அத்தனைக் கொடூரக் குணமில்லையே
கவிதையாய்
எடுத்தெழுதிக்காட்டிவிட

No comments: