பவள ஒளி தெறிக்கும் புன்னகையோடு

பூரண நம்பிக்கைப்
பொற் தேர் வீதியில்
புதுநிலவாய் உலாவரும்
பூரிப்புப் பொழுதுகளில்

உன் எதிர்பார்ப்பு
நெரிசல்களாலேயே
நொறுங்கிப்போய்விடாதே

காலத்தால் மூடிக்கிடக்கும்
வெற்றியை மறந்துவிடு

முயற்சிகளில் முழுதாய்
மூச்சைப் பிணைத்துவிடு

கதவுகள் தட்டப்படும்
களியூற்று லயத்தோடு

வாசலில் வந்து
காத்திருக்கும்
வெற்றி
தன்
பவளவொளி தெறிக்கும்
புன்னகையோடு

No comments: