வாசிப்பில் லயிப்பவர்கள்...

வாசிப்பில்
லயிப்பவர்கள்
மிதமாக
வாசிப்பவர்களைக்
கேவலமாக
ஏன் பேசுகிறார்கள்?

மனிதர்களை
அவர்களுக்காகவே
நேசிக்கத் தெரியாதவர்களின்
வாசிப்பு
அவர்களுக்கு
எதைத் தந்துவிடும்?

எழுத்து வாசிப்பு மட்டுமா
வாசிப்பு
இதய வாசிப்பு என்பது
அதனினும் பெரிதில்லையா?

வாழ்க்கையை
வாசிப்பவர்களைவிட
நூல் வாசிப்பவர்கள்
சிறந்தவர்களாகிவிட
முடியுமா என்ன?

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// வாழ்க்கையை வாசிப்பவர்களைவிட... ///

சத்தியமான வரிகள்...

mohamedali jinnah said...

வாசிப்பில் லயிப்பவர்கள் மிதமாக வாசிப்பவர்களைக் கேவலமாக ஏன் பேசுகிறார்கள்?

மனிதர்களை அவர்களுக்காகவே நேசிக்கத் தெரியாதவர்களின் வாசிப்பு அவர்களுக்கு எதைத் தந்துவிடும்?

எழுத்து வாசிப்பு மட்டுமா வாசிப்பு இதய வாசிப்பு என்பது அதனினும் பெரிதில்லையா?

வாழ்க்கையை வாசிப்பவர்களைவிட நூல் வாசிப்பவர்கள் சிறந்தவர்களாகிவிட முடியுமா என்ன?

This is my comment
அன்புடன்
நேசிக்கத் தெரிந்தவன்.நேசத்தை நேசிப்பவன்