28

என் தாக நெஞ்சின்
நெடுங்காலக் கற்பனையிலிருந்து
நழுவித் தரையிறங்கி
என் மடிவிழுந்த செல்லமே

என் முத்தங்களின்
மூடிவைக்காத பெட்டகமே

உன்
அப்பழுக்கற்ற அன்பிருக்க
என் நூறையும் கடந்து
ஒவ்வோர் பொழுதிலும்
இப்பொழுதுதான்
புதிதாய்ப் பிறந்தேன் என்ற
நினைவுத் துள்ளலோடும்
நீங்காத நிம்மதியோடும்
நெடுங்காலம் வாழ்வேனடா
என் செல்ல நிலவே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: