பாசமென்ற பெயரால்

உண்மையின்
பொன்னிதழ்களைப்
பொசுக்கினாலும்

நியாயத்தின்
பவளக்கிளைகளை
வெட்டிச்சாய்த்தாலும்

நீதியின்
வைரவேர்களைக்
கருக்கினாலும்

நெஞ்சே
உன்
பாச நெருப்புதான்
பரிசுத்தமானதோ

அறம் புதைக்கும்
பாசம்
பாசமல்ல
வேசம்

No comments: