*****
82

நெஞ்சு நிறைய
கண்ணீரைக் கொட்டிவிட்டுச்
சென்றுவிட்டாய்

மூச்சுவிட முடியாமல்
மூழ்கிக் கிடக்கிறது
இதயம்

நீரில் விழும் எல்லாமும்
எடை இழக்கும் என்பார்கள்
உன் கண்ணீரில் விழுந்த
என் இதயம் மட்டும்
கனமாய்க் கனக்கிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

அன்புடன் புகாரி

No comments: