சாவே சாவே சாவாய் சாவா 

சொல்ல வேண்டியவற்றைச்
சொல்லும்முன்
இழுத்துச் செல்வது
அநாகரிகமில்லையா

காணவிரும்பியதைக்
காணும்முன்
கண்ணடைத்துச் செல்வது
கொடுமையில்லையா

சொல்லிவிட்டுச் செல்ல
நெஞ்சற்றவன் மனிதன் என்றா
இத்தனைக் கேவலமாய்
நடத்துகிறாய்

எந்த ஒரு
பண்புமே இல்லா
மூர்க்கமே முட்டாளே
மரணமே

மாண்ட மறுநொடியே
உன்னைக் கண்டுபிடித்து
மண்டை பிளக்க முடிந்தால்
அதைச் செய்யா உயிர்
ஒன்றும் இரா

மகா கேடுகெட்ட
மனிதப் பிறவிகூட
உன்னைக் காட்டிலும்
மிக உயர் பண்புகளைப்
பெற்றிருப்பான்

சாவே சாவே
சாவாய் சாவே

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

சாவுக்கே சாபமா
அருமை நண்பரே