கையறு நிலை

ஆறுதலே
சொல்ல முடியா இடத்தில்
எப்படித்தான் நிற்கிறேன்
என்னதான் பேசுகிறேன்

என்ன பேசி
எதைத் தந்துவிடுவேன்


அச்சமாய்
அவமானமாய்
ஆத்திரமாய்
வக்கற்ற கொதிப்பில்
விழிகுத்திய நிலையில்

சாவுக்குமுன்
ஏமாந்து
தோற்று
துவண்டு
வெதும்பி நிற்கும்
நிலை ஒன்றுதான்
உச்சத்திலும் உச்சமான
ஒரே
கையறு நிலையோ...

No comments: