புலவர்கள் பொய் மூட்டைகளா?

பொய்யிலே பிறந்து
பொய்யில வளர்ந்த
புலவர் பெருமானே
என்றால்
புலவர்கள் கவிஞர்கள் எல்லாம்
பொய் மூட்டைகளா

காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்தப் பையடா
என்றான் ஒரு சித்தன்

உலகே மாயம் வாழ்வே மாயம்
என்றான் இன்னொரு சித்தன்

ஆக
புலவர் பெருமான் மட்டுமல்ல
உலகின் ஒவ்வோர் உயிரும்
காயம் என்ற
பொய்யிலே பிறந்து
உலகம் என்ற
பொய்யிலே வளர்ந்தவைதானே