ஆறுதலும் நிம்மதியுமே இறைவன்

ஆறுதலும் நிம்மதியும்
தரமாட்டான்
அவந்தான் இறைவன்
என்று
கூறிப்பாருங்கள்

பக்தர்கள்
பைத்தியங்களாய்
ஆகிவிடுவார்கள்

மனிதர்களிடம்
ஆறுதலும் நிம்மதியுமாய்
இருந்துபாருங்கள்

நீங்கள்
இறைவனின் அருகே அருகே
சென்றுகொண்டிருப்பதை
உணர்வீர்கள்

ஆறுதலும் நிம்மதியுமாய்
இருப்பதும்தான்
இறைவனை அடையும்
ஒரே வழி

மனித நேயம் காப்பதும்
இறைவனை அடைவதும்
இருவேறு செயல்கள் அல்ல

No comments: