விளையாடிச் செல்கிறது...

வசந்தங்கள் தேடும்
பார்வைகளோடும்

வாய்ப்புகளுக்கேங்கும்
தாகங்களோடும்

விழிகளில் நிறையும்
கனவுகளோடும்

விரல்களில் கனியும்
தவிப்புகளோடும்

உயிரூட்டித் தேற்றும்
தமிழோடும்

அத்தனைக்கும் மேலொரு
முத்தமாக
இந்நொடி நலம் கேட்கும்
மனம்பிடித்தக் கவிதையோடும்
விளையாடிச் செல்கிறது
வாழ்க்கை

No comments: