ஈழ மகா காவியம்!
ஈழ எழுத்தாளர்கள் ஏராளமாக இங்கும் அங்கும் எழுதி இருக்கிறார்கள். முழுமொத்த காவியத்தை ஓர் ஈழத்தவர் எழுதத்தான் வேண்டும். அதில் மாற்றுக்கருத்தே இல்லை.
உயிரழிந்த பூமியில் எங்கும் புலம்பெயர்ந்துவிடாமல் அங்கேயே வாழ்ந்தவர்கள் எழுதினால் அது வெகு சிறப்புதான். எழுதட்டும்.
கவிஞர் வைரமுத்துவுக்குத் தெரிந்ததை அவர் எழுதட்டும்.
விமரிசனங்களை நூல் வெளிவந்தபின் செய்தால், அதுவே நல்ல சரித்திரமாக நல்ல புதுக் காவியமாக அமையும்.
இப்போதே கிளம்பும் விமரிசனங்கள் அந்த நூலை வாங்கத் தூண்டும் விளம்பரங்களாகவே அமையுமே தவிர வேறொன்றையும் சாதிக்காது.
எழுது எழுதவிடு
அதுவே இலக்கியக் கோட்பாடு!

No comments: