வீதியைப் பெறுக்கவில்லை
கற்கள் குப்பைகளை
அகற்றவில்லை

அப்படியே அதன்மீது
ஒரு கோலம் போட்டேன்

என் கோல எழிலில்
கோடுகளின் இடையில்
கோட்டின் உள்ளில்
ஒன்றிப்போயின பல கற்கள்

ஒன்றுமற்றுப் போயின
சில குப்பைகள்

அழகில்
குறையொன்றுமில்லை

அனைத்தையும்
என் கோலம்
அணைத்ததில் மகிழ்ந்தேன்

ஆயினும்
கோலத்தினூடே
எவ்வகையிலும்
ஒன்றாத கற்களாய்
எக்கோட்டினோடும்
இணங்காத கற்களாய்

வெகு சில மட்டும்
திமிறக் கண்டேன்

கோலத்தை 
அலங்கோலமாக்கும்
அவலம் கண்டேன்

மனம் வலித்தது என்றாலும்
கோலத்தின் நலன்கருதி
எடுத்தெறிந்துவிட்டு
இன்புற்றிருக்கிறேன்

உலகே
உனைக் காக்க
கொலைக் கோடரிகளைப்
பலியிடலே அறம்

No comments: