தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

பெற்ற பிள்ளையையே
தியாகம் செய்ய முற்படுகிறார் பக்தர்
மகனும் தலைசாய்க்கிறான்
கூர் வாளோ வெட்ட மறுக்கிறது
சாத்தானும் தடுக்கிறான்
பலியிடத்தான் வேண்டுமெனில்
அதற்கு ஓர் ஆடு போதுமென்று
இறைக்கட்டளை வந்ததாக
காட்சி மாறுகிறது கருணை நிறைகிறது
நரபலி மறுத்து மனிதத்தைக் காத்தத்
திருநாள்தான் ஹஜ் பெருநாள்
தனக்குள் இருக்கும்
தீயவற்றைப் பலியிடுதலே
இறைக்கான பலியென்றானது

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

No comments: