இரண்டும்
உன்னுடையவைதான்

இரண்டிற்கும்
என்மீது
கொள்ளைப் பிரியம்தான்

ஆயினும்
மேலுதடு
வசந்தநிலத் தேனாய்
வழிய...

கீழுதடு மட்டும்
ஏனடி இப்படிக் கொதிக்கின்றது
பாலைவனக் கோடையின்
பேரீச்சங்கனியாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: