பயணம் ஒருவழியாய்
முடியத்தான் போகிறது
வழியெல்லாம் உதிர்ந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றையும் அள்ளியெடுத்துத்
தங்கமுலாம் பூசிப் பூசி
நினைவுப் பொந்துகளில்
பத்திரப்படுத்தினேன்
ஆனால்
நொடிகளில்
தன் பித்தளை முகம் காட்டுவதை
அந்நிமிடங்கள் நிறுத்தவே இல்லை
ஆக
நான் தான் போலியாகிப்
பல்லிளித்து நின்றேன்
பித்தளை தன் நிசத்தில்
நிமிர்ந்துதான் நின்றது
என் நாட்கள்தான் போலி
பித்தளையின் நாட்களோ
அச்சு அச்சு அசல் அசல்
வெற்றிபெற்ற
மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
கண்ணதாசா அடப்பாவி
கொல்றியடா

No comments: